பெருமாட்டு நல்லூர் ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 3 May 2023

பெருமாட்டு நல்லூர் ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம்


செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருமாட்டு நல்லூர் ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பெருமாட்டுநல்லூர்   ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் கன்னிவாக்க கிராமம் சமுதாய கூடத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பகவதி நாகராஜன் தலைமையில் நடைபெற்றது, ஒன்றிய செயலாளர் முன்னாள் தலைவருமான  ரவி,  துணைத் தலைவர் பிரியா பிரதாப், இவர்களுடன் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். 

ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சியில் நலத்திட்டங்களை ஊராட்சியில் சீர் செய்த பணிகளை குறித்து கூறும்பொழுது பொதுமக்களிடம் சலசலப்பு ஏற்பட்டது, பொதுமக்கள் தலைவரிடம் கேள்விகளை எழுப்பினர் பின்னர் பொதுமக்களின் கேள்விக்கு தலைவர் பதிலளிக்காததால் சுமார் இரண்டு மணி நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது, பின்னர் காவல்துறையினரை வரவழைக்கப்பட்டு  பொதுமக்களை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர் பின்னர் பெருமாட்டு நல்லூர்  ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டத்திலிருந்து ஒன்றிய கவுன்சிலர் சித்ரா ரவி ஒன்றிய செயலாளர் முன்னாள் தலைவருமான  ரவி அவர்கள் துணைத் தலைவர் பிரியா பிரதாப்  மற்றும்  ஒன்னாவது ,இரண்டு நான்கு, ஐந்து, ஒன்பது,வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் அனைவரும் வெளியேறினார் .

No comments:

Post a Comment

Post Top Ad