முதலமைச்சரின் காலை உணவு திட்ட சமையல் செய்யும் பயிற்றுநர்களுக்கான 2 நாள் பயிற்சி. - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 3 May 2023

முதலமைச்சரின் காலை உணவு திட்ட சமையல் செய்யும் பயிற்றுநர்களுக்கான 2 நாள் பயிற்சி.


செங்கல்பட்டு மாவட்டம் எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த சமையல் செய்யும் பயிற்றுநர்களுக்கான 2 நாள் பயிற்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள் இன்று (02.05.2023) துவக்கி வைத்தார். 

உடன் மகளிர் திட்ட இயக்குநர்கள் (செங்கல்பட்டு) திருமதி.செல்வராணி, (திருவள்ளுர்) திருமதி.மலர்விழி, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மரு.அனுராதா, எஸ்.ஆர்.எம் கல்லூரி இயக்குநர் டாக்டர்.டி.ஆண்டனி அசோக்குமார், எஸ். தண்டபாணி(வ.ஊ) எம்.வெங்கட்ராமன் (கி.ஊ) மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad