அடையார் ஆற்றில் வீணாக வெளியேற்றுவதால் சமூக நல ஆர்வலர்கள்,விவசாயிகள் அரசுத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் ஏறி பராமரிப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது விவசாய பணிகள் நிறைவு பெற்று அறுவடை நடப்பதால் விவசாயிகளுக்கு ஏரி தண்ணர் தேவைப்படாது எனக் கூறி ஏரி நீரை வெளியேற்றும் பணிகளில் துவங்க ஒப்பந்ததாரர், மாவட்ட ஆட்சியர்க்கு அனுமதியும் கோரியிருந்தார்.
இது தொடர்பாக கருத்து கேட்டு கூட்டம் நேற்று கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே காலை 11மணியளவில் நடந்தது இந்த கூட்டத்தில் ஒன்பது விவசாயிகள் மட்டும் பங்கேற்றனர். உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன்,உதவி பொறியாளர் குஜராஜ், வண்டலூர் தாசில்தார் பாலாஜி, கூடுவாஞ்சேரி வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பங்கேற்றனர். கூடுவாஞ்சேரி ஏரியில் உள்ள நீரை அருகில் உள்ள ஆதனூர் ஏரிக்கு கொண்டு சென்று தேக்கி வைத்து நீரையும் வீணடிக்காமல் பணிகளை செய்ய உள்ளதாக விவசாயிகளிடம் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
அதற்கு விவசாயிகள் சம்மதம் தெரிவித்தனர். ஏரியில் உள்ள ஆகாயத்தாமரையை அகற்றும் பணியையும் துவங்க தீர்மானம் 9 பேர் கொண்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment