பஞ்ச பாண்டவர் சமேத திரௌபதி அம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றன.! - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 26 April 2023

பஞ்ச பாண்டவர் சமேத திரௌபதி அம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றன.!


கூடுவாஞ்சேரி அருள்மிகு  பஞ்ச பாண்டவர் சமேத திரௌபதி அம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகராட்சி உட்பட்ட கூடுவாஞ்சேரியில் அருள்மிகு  பஞ்சபாண்டவர் சமேத திரெளபதி அம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவில் திருவிழா  கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டு தினமும் நடைபெற்று வருகிறது, இதில் முக்கிய  நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் நேற்று கோவில் வளாகத்தில் கொடிமரம் அருகில் வைத்து  நடைபெற்றது.



அதற்கு முன்பு மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு போன்ற நிகழ்ச்சிகள்  சிறப்பாக நடைபெற்றது. நேற்று காலை 10:30 மணி முதல் 12.00 மணி வரை நடைபெற்றது.  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை  சிறப்பாக கண்டு மகிழ்ந்தனர்.


திருக்கல்யாண வைபவத்தை ஆயிர வைசிய குல மரபினர் மற்றும் நந்திவரம் கூடுவாஞ்சேரி சுற்று வட்டார அனைத்து செட்டியார்கள் நல சங்கத்தின் சார்பில் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad