

அதனைத்தொடர்ந்து பரிவார மூர்த்திகளுக்கும் இறுதியாக கருவறையில் அமர்ந்துள்ள மூலவர் அருள்மிகு ஶ்ரீவேண்டவராசியம்மனுக்கு மஹாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்பு பாலாபிஷேகம் அலங்காரம் தீபாராதனைகள் காட்டப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் .ஆறுமுகம், திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தையூர் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். குமரவேல், திருப்போரூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் குட்டி (எ) நந்தகுமார், திருப்போரூர் வடக்கு ஒன்றிய மகளிர் அணி இணை செயலாளர் டி. தாட்சாயணி தனசேகரன் மற்றும் நெல்லிக்குப்பம், கூடுவாஞ்சேரி, அம்மாபேட்டை, மேலையூர், கீழுர், தர்மாபுரி, மேல்கல்வாய், சென்னை, திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
No comments:
Post a Comment