மணிப்பூர் விவகாரம் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 26 July 2023

மணிப்பூர் விவகாரம் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


செங்கல்பட்டு பெரியார் சிலை அருகே மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கல்பட்டு நகர ஆட்டோ ஓட்டுநர்கள் நல முன்னேற்ற சங்கம் மற்றும் பசித்தோருக்கு உணவு வழங்கும் அமைப்பின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு நகர ஆட்டோ ஓட்டுநர் நல முன்னேற்ற சங்கத்தின் தலைவர் குப்புசாமி, பொறுப்பாளர் டேனியல் மற்றும் பசித்தோருக்கு உணவு அளிக்கும் அமைப்பின் செங்கல்பட்டு அமைப்பாளர் பாலாஜி மற்றும் மணிவண்ணன், முருகானந்தம், மூர்த்தி, பெஞ்சுமண், விஜய், சந்தோஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.


மணிப்பூர் கலவரத்திற்கு பொறுப்பேற்று அம்மாநில அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும், மணிப்பூரில் அமைதி நிலவ மத்திய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு கோரிக்கையை முன் வைத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பள்ளி மாணவர்களும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad