செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பெண் குழந்தைகளை காப்போம் என்ற திட்டத்தில் பெண் குழந்தைகளின் பெயரில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன் மற்றும் சமூக நலம் (ம) மகளிர் உரிமை துறை அதிகாரி சங்கீதா, காட்டாங்குளத்தூர் அவை தலைவரும் ஆலப்பாக்கம் வனக்குழு தலைவர் வி.ஜி .திருமலை, வட்டார வளர்ச்சி அதிகாரிகள்,மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், குழந்தைகள், தாய்மார்கள், என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment