காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மன்றக்கூடம் மற்றும் ஒன்றிய குழு தலைவர் அறை திறப்பு விழா. - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 17 July 2023

காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மன்றக்கூடம் மற்றும் ஒன்றிய குழு தலைவர் அறை திறப்பு விழா.


செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மன்றக்கூடம் மற்றும் ஒன்றிய குழு தலைவர் அறை திறப்பு விழா மற்றும் கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது. விழாவில், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன்வெட்டி அறையை திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.


இந்நிகழ்வில் காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் பி.சந்தானம் காட்டாங்குளத்தூர் அவை தலைவரும் வனக்குழு தலைவர் விஜி .திருமலை மற்றும் விழாவில் 24 ஒன்றிய கவுன்சிலர்களும் சோமசுந்தரம், அம்சவல்லி, கொளப்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் கே எஸ் என். நேதாஜி, மோகனாம்பாள் கண்ணன், தமிழ்செல்வி, ஸ்ரீ தினேஷ், சுந்தர்ராஜ், இளங்கோவன், சித்ரா ரவி, மகிலா, மோகனா ஜீவானந்தம், ஜெயலட்சுமி, செல்வகுமாரி, சரிதா பவுல், ஷீலா, புலிப்பாக்கம் திம்மாவரம் ஒன்றிய கவுன்சிலர் அருள் தேவி, சரளா, ஆலப்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் நிந்துமதி திருமலை, சங்கமித்திரை, பிரேமலதா, தரணி ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். கலந்து கொண்ட அனைவரையும் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன் வரவேற்று உபசரித்தார்.


அலுவலக அறை திறப்பு விழாவில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad