படூர் முதல்நிலை ஊராட்சியில் 07வதுவார்டில் புதிய பேவர்பிளாக் சாலை அமைக்க பூமிபூஜை. - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 28 April 2023

படூர் முதல்நிலை ஊராட்சியில் 07வதுவார்டில் புதிய பேவர்பிளாக் சாலை அமைக்க பூமிபூஜை.


செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட படூர் முதல்நிலை ஊராட்சியில் உள்ள 07வதுவார்டு காந்திநகர் முகப்பில் ஊராட்சி மன்றம்  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் புதியபேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் படூர் ஊராட்சி மன்றத்தலைவர் கே.ஏ.எஸ்.தாராசுதாகர் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வனிதாசேட்டு முன்னிலை வகித்தார், 07வதுவார்டு உறுப்பினர் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக திமுக கட்சியின் திருப்போரூர் வடக்கு ஒன்றியச்செயலாளரும், ஒன்றியக்குழுப்பெருந்தலைவருமான  எஸ்.ஆர் .எல் .இதயவர்மன்   பூமிபூஜைநிகழ்ச்சியில் கலந்துகொண்டு புதியபேவர்பிளாக் சாலை அமைக்கும் பணியினை துவங்கிவைத்து  பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்நிகழ்வில்  தலைமை செயற்குழு உறுப்பினர் மாம்பாக்கம் ஜி.சி .அன்புச்செழியன், திருப்போரூர்  வடக்கு ஒன்றிய அவைத்தலைவரும், சிறுசேரி முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவரும், இன்னாள் துணைத்தலைவரும் என்.எஸ்.ஏகாம்பரம், திருப்போரூர் வடக்கு ஒன்றிய துணைச்செயலாளர் வெண்பேடு இரமேஷ் ,ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், படூர் கிளைச் செயலாளர் ரவி, படூர் சமத்துவ சரவணன் நவீண், ஹரிஸ் மற்றும் கட்சியினர்கள் பொதுமக்கள் திரளானவர்கள் கலந்துகொண்டனர்கள்.


திருப்போரூர் ஒன்றியக்குழுப் பெருந்தலைவர் எஸ்.ஆர்.எல். இதயவர்மனுக்கு தலைவர் கே .ஏ.எஸ் .தாராசுதாகர் சால்வையணிவித்து  பூங்கொத்து வழங்கி ஆசிப்பெற்றார். வந்திருந்து கலந்துகொண்ட அனைவருக்கும் படூர் மாற்றத்தை நோக்கி அறக்கட்டளையின் தலைவரும், படூர் அனைத்து வியாபாரிகள் சங்கத்தலைவருமான கே.ஏ.எஸ்.சுதாகர் சால்வையணிவித்து நன்றி தெரிவித்தார் . தலைவரின் சீரிய முயற்சியால் 20ஆண்டுகளுக்கு பிறகு புதியதாக போடப்படும் சாலையால்  வாகனஓட்டிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad