பவுஞ்சூர் அருகே தமிழ்நாடு உடுக்கை பம்பை கை சிலம்பாட்ட கிராமிய கலைத் 'தொழிலாளர்கள் நலம் முன்னேற்ற கழக சங்கத்தின் சார்பில் கிராமிய கலை குறித்து விழுப்புணர்வு பேரணி. - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 17 May 2023

பவுஞ்சூர் அருகே தமிழ்நாடு உடுக்கை பம்பை கை சிலம்பாட்ட கிராமிய கலைத் 'தொழிலாளர்கள் நலம் முன்னேற்ற கழக சங்கத்தின் சார்பில் கிராமிய கலை குறித்து விழுப்புணர்வு பேரணி.


செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஒன்றியம் காத்தான்கடை பகுதியில் தமிழ்நாடு உடுக்கை பம்பை கை சிலம்பாட்ட கிராமிய கலை தொழிலாளர்கள் நல முன்னேற்றம் சார்பில் விழிப்புணர்வு நடைபெற்றது இந்தப் பேரணையில் லத்தூர் ஒன்றிய சங்கத்தின் தலைவர் பாலாஜி, ஒன்றிய செயலாளர் அரிகிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் குரு ஆகியோர் ஓசுரான் திருக்கழுக்குன்றம் ஒன்றிய தலைவர் காளி சுப்பிரமணி அச்சரப்பாக்கம் சித்தாமூர் மதுராந்தகம் வந்தவாசி திருப்போரூர் உத்திரமேரூர் காஞ்சிபுரம் குன்றத்தூர் ஆகிய ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாநில தலைவர் எம் சி தலைமை தாங்கினார் சங்கத்தின் நிறுவனர்  மற்றும் மாநில பொதுச் செயலாளர் ஜெகநாதன் மாநில தலைவர் காண்டீபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணையை தொடங்கி வைத்தனர் காத்தான் கடையில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்தப் பேரணியில் 500க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் கலந்து கொண்டு கரகாட்டம் பொய்க்கால் குதிரை நடனமாடி உடுக்கை பம்பை அடுத்தவாறு பொதுமக்களிடையே கிராமிய கலை அழியாமல் பாதுகாப்பதை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad