புதிய நியாயவிலை கடை திறப்பு; MLA பங்கேற்பு. - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 31 May 2023

புதிய நியாயவிலை கடை திறப்பு; MLA பங்கேற்பு.


மதுராந்தகம்  நகராட்சி 13வது வார்டு  பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 13வது வார்டு பகுதியில் பகுதிநேர நியாய விலை கடை  அமைத்து தர வேண்டி மதுராந்தகம் சட்ட மன்ற உறுப்பினரிடம் மனு அளித்தனர், இதனை தொடர்ந்து மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் கே.மரகதம் குமரவேல் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ7 இலட்சம் நிதி ஒதுக்கி 13வது வார்டு பகுதியில் பகுதிநேர நியாய விலை கடை  அமைக்கும் பணி மேற்கொண்டு அதற்கான திறப்புவிழா நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியை செங்கல்பட்டு கிழக்கு அதிமுக மாவட்ட செயலாளர்  திருக்கழுக்குன்றம்  எஸ்.ஆறுமுகம், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர், மதுராந்தகம் ஒன்றிய குழு பெருந்தலைவர்  கே. கீதா கார்த்திகேயன் ஆகியோர் ரிப்பன் வெட்டி கல்வெட்டு திறந்து இனிப்புகள் வழங்கி துவங்கி வைத்தனர்.


இந்நிகழ்ச்சியில் மதுராந்தகம் நகர அதிமுக செயலாளர்  வி. ரவி, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆணுர் வி.பக்தவச்சலம் சீனிவாசன், திரு பூக்கடை கே.சரவணன் மதுராந்தகம் நகர மன்ற உறுப்பினர் திருமதி கே. வரலட்சுமி தேவி கோபிநாத், மதுராந்தகம் நகரமன்ற உறுப்பினர் காதர்மொய்தீன், அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad