ஓடிசா ரயில்கோர விபத்தில் பலியானவர்களுக்கு மெளனஅஞ்சலி செலுத்தி ஊர்வலம். - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 5 June 2023

ஓடிசா ரயில்கோர விபத்தில் பலியானவர்களுக்கு மெளனஅஞ்சலி செலுத்தி ஊர்வலம்.


படூர் முதல்நிலை ஊராட்சியில் ஓடிசா மாநிலத்தில்  ஏற்பட்ட  ரயில்கோர விபத்தில் பலியான சுமார் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு மெளனஅஞ்சலி செலுத்தி ஊர்வலமாக நடந்துசென்று  மரக்கன்றுக்களை பொதுமக்களுடன் இணைந்து நட்டுவைத்த படூர் மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை தலைவர் படூர் கே.ஏ.எஸ்.சுதாகர், படூர் ஊராட்சி மன்றத்தலைவர் கே.ஏ.எஸ்.தாராசுதாகர், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சியில் உள்ள ரவுண்டானவில் படூர் ஊராட்சிமன்ற  நிர்வாகம் மற்றும் படூர்  மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை ஒன்றிணைந்து சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் என சுமார் 75 பேர் கையில் மரக்கன்றுகளை எந்தியாவாறு ஊர்வலம் சென்று அஞ்சலி செலுத்தினர். 


ஒடிசாவில் நடைபெற்ற கோர ரயில் விபத்தில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மௌன ஊர்வலமாக சென்று பின்னர் படூர் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள காலி இடத்தில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்தினர். 


இந்நிகழ்வினை படூர் மாற்றத்தை நோக்கி அறக்கட்டளையின் தலைவர் கே.ஏ.எஸ்.சுதாகர், படூர் ஊராட்சி மன்றத்தலைவர் கே.ஏ.எஸ்.தாராசுதாககர் ஆகியோர்கள் மரக்கன்றுகளை நட்டுவைத்து நிகழ்வை துவங்கி வைத்தனர்கள். இந்நிகழ்வில் வார்டு உறுப்பினர்கள், சமத்துவ சரவணன், படூர் பசுமை செங்கை ஆனந்தன், கோகுல் துப்பாக்கிமணி, நவீண் மற்றும் ஊராட்சி மன்ற ஊழியர்கள், பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad