திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்எஸ் பாலாஜியின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் இரத்ததானம் வழங்கப்பட்டது. - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 24 September 2023

திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்எஸ் பாலாஜியின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் இரத்ததானம் வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் ஊராட்சி புதுப்பாக்கத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் துணை பொதுச்செயலாளர் மற்றும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி அவருடைய பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது, ஆன்ட்டி கரப்ஷன் அண்ட் விஜிலென்ஸ் கவுன்சில் ஆப் இந்தியா நேஷனல் சேர்மன் டாக்டர் சாம் பிரசாத் தலைமையில் புதுப்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில் கேக் வெட்டி கொண்டாடினர்.


இதில் நேஷனல் சீப் டைரக்டர் டாக்டர் வர்ணிகா, நேஷனல் சீப் செகரட்டரி சந்தோஷ் கண்ணா, வைஸ் சேர்மன் தமிழ்நாடு சுகன்யா பாலசுப்பிரமணியம், ஸ்டேட் டைரக்டர் தமிழ்நாடு ராஜேஷ்குமார் மற்றும் ஸ்டேட் செக்கரட்டரி மைக்கேல், ஸ்டேட் செக்கரட்டரி முகமது அபார்ட், நேஷனல் டைரக்டர் லாவண்யா, இவர்களுடன் அம்பேத்கர் துரை. சங்கீதா ராஜன் விசிக மாவட்ட செயலாளர் கேது (எ) தென்னவன் கலந்து கொண்டனர் மற்றும் இந்நிகழ்ச்சியில் இரத்ததான முகாம் நடைபெற்றது இதில் 50க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்தனர். மற்றும் தமிழ்நாடு எம்ஜிஆர் மெடிக்கல் யூனிவர்சிட்டி இணைந்து ரத்ததானம் செய்தவர்களுக்கு திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி சான்றிதழ்கள் வழங்கினார். 

No comments:

Post a Comment

Post Top Ad