பன்னாட்டு லைன்ஸ் சங்கங்கள் மறைமலைநகர் புதிய சகாப்தம் லைன்ஸ் சங்கம் மற்றும் தாம்பரம் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம். - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 29 October 2023

பன்னாட்டு லைன்ஸ் சங்கங்கள் மறைமலைநகர் புதிய சகாப்தம் லைன்ஸ் சங்கம் மற்றும் தாம்பரம் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமிற்கு சிறப்பு விருந்தினர்களாக மறைமலைநகர் நகர மன்ற தலைவர் ஜெ.சண்முகம், மறைமலைநகர் நகர மன்ற துணைத் தலைவர் சித்ரா கமலக்கண்ணன், மற்றும் லைன்.எஸ். மதியழகன் மாவட்ட ஆளுநர்,லைன் இரா.அன்பரசு மாவட்ட முதல் துணை ஆளுநர், லைன் பி.அம்சவல்லி மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர்,லைன் பாலாஜி மண்டல தலைவர்,ஆகியோர் பங்கேற்றனர். இம்முகாமில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவச பரிசோதனை செய்யப்பட்டு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது.


கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவச பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் பிற நோய்களுக்கு மருந்து உட்கொள்ளும் நபர்கள் முகாமிற்கு வரும்பொழுது சீட்டு அல்லது மாத்திரைகளை உடன் எடுத்து வர கூறி பின்னர் அவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 


இம்முகாம் லைன் என்.ஆர்.பிரபு தலைவர், லைன் ஆ.ராமலிங்கம் செயலாளர், லைன் பி.மகாலட்சும பொருளாளர், லைன் வி.செல்வம் இயக்குநர், லைன் பி.பாஸ்கர் சாசன தலைவர், ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் இம்முகாம் சிறப்பாக நடைபெற்றது. மற்றும் சங்க உறுப்பினர்கள் சுமதி மலர்விழி மகாலட்சுமி கலந்து கொண்டனர். மேலும் இதில் மறைமலைநகர் பகுதி மக்கள் 500க்கும் மேற்பட்டோர்  முகாமில் பங்கேற்று பயனடைந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad