கருநீளம் ஊராட்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பில் பூத் கமிட்டி மற்றும் ஆலோசனைக் கூட்டம். - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 5 November 2023

கருநீளம் ஊராட்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பில் பூத் கமிட்டி மற்றும் ஆலோசனைக் கூட்டம்.


செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் அதிமுகவின் சார்பில் கிழக்கு ஒன்றிய செயலாளர் சம்பத்குமார் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. நடைபெற்ற இக்கூட்டத்திற்கு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் ச.இராஜேந்திரன், மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், மற்றும் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செங்கல்பட்டு மாவட்ட கவுன்சிலர் இரத்தினமங்கலம் கஜா (எ) கஜேந்திரன், ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு வாக்குகள் சேகரிப்பதை குறித்து பூத் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கும் கிளைச் செயலாளர்களுக்கும் ஆலோசனை வழங்கினார்கள்.
 

மேலும் இக்கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் மகாலி செந்தில்குமார், கிளைச் செயலாளர்கள் தயாளன், சீனிவாசன், மணி, சம்பத்குமார், சந்திரசேகர், ஜனார்த்தனன், மோகன், கணேசன், சதீஷ்குமார், எச். மணி, டில்லி, சுதாகர் தகவல் தொழில்நுட்பம் பிரிவு செயலாளர், மற்றும் நிர்வாகிகள் மகளிர் அணி இளைஞரணி என ஏராளமான பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad